Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவின் முடிவைக் கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!

vinoth
செவ்வாய், 5 நவம்பர் 2024 (13:53 IST)
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று டெஸ்ட்களையும் தோற்று இந்திய அணி வொயிட்வாஷ் ஆனது. இன்று நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும் இந்திய அணி கோட்டை விட்டு முதல் முறையாக நியுசிலாந்து அணியிடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள கேப்டன் ரோஹித் ஷர்மா “நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.  நியுசிலாந்து அணி எங்களை விட எல்லா விதத்திலும் சிறப்பாக விளையாடினர். நான் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சரியாக விளையாடவில்லை.  ஒரு அணியாக நாங்கள் சரியாக விளையாடத் தவறிவிட்டோம். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார். ஆனாலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “ஒரு தொடரின் முதல் போட்டியில் கேப்டன் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தால் அது பரவாயில்லை. கேப்டன் விளையாடவில்லை என்றால் அது அந்த போட்டியை வழிநடத்தும் கேப்டனுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments