பேட் செய்யும்போது மைதானத்தில் இருந்து வெளியேறிய ரோஹித் ஷர்மா… என்ன ஆச்சு?

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (08:54 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்றைய போட்டியின் போது முதுகு பிரச்சனை காரணமாக வெளியேறினார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா திடீரென முதுகுப் பிரச்சனை காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். முன்னதாக் அணியின் பிஸியோ வந்து அவரோடு ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் வெளியேறினார்.

போட்டி முடிந்த பின்னர் முதுகுப்பிரச்சனை குறித்து பேசிய ரோஹித் ஷர்மா “இப்போது பரவாயில்லை.அடுத்த போட்டிகளுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. அதற்குள் முழுவதுமாக குணமாகிவிடுவேன் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments