Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட்டும் ரோஹித்தும் ஈடு செய்ய முடியாதவர்கள்… முன்னாள் கேப்டன் கருத்து!

vinoth
வியாழன், 18 ஜூலை 2024 (07:41 IST)
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

இந்த கோப்பையை வென்றதன் மூலம் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 20-20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர். இளைய தலைமுறையினருக்கு வழிவிடும் விதமாக இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் “ரோஹித் மற்றும் விராட் கோலி இல்லாதது டி 20 கிரிக்கெட்டுக்கு பாதகமானதுதான். அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எப்படி ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் தோனியின் இடத்தை நிரப்ப முடியாதோ அதுபோல ரோஹித் மற்றும் கோலியும்” என்க கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments