Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி அடைந்தால் கேட்கக்கூடாது; பின்வாங்கிய கேப்டன் ரோகித்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (12:42 IST)
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா, எந்த அணி வெற்றிப்பெறும் என்று சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

 
இலங்கை, இந்தியா, வங்க தேசம் ஆகிய அணிகள் இடையே இலங்கையில் முத்தரப்பு டி20 போட்டி நடைபெறுகிறது. இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த முத்தரப்பு டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரோகித் சர்மா கூறியதாவது:-
 
இந்த போட்டி தொடரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிக என்று நான் சிந்திக்கவில்லை. 20 ஓவர் போட்டியை பொறுத்த வரையில் ஒரு ஓவரில் கூட ஆட்டத்தின் போக்கு மாறலாம். இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டி போல் டி20 போட்டியிலும் எந்த அணி வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.
 
அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் இருக்கும் வீரர்களின் பலத்தை பரிசோதிக்க இந்த போட்டி தொடர் நல்ல வாய்ப்பாகும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments