Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன் ரோஹித் சர்மா- மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (20:27 IST)
10 ஆண்டுகளாக மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்துள்ள அணி நிர்வாகம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடந்து வருகிறது.  இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 10 ஆண்டுகளாக  கேப்டன் பொறுப்பில் இருந்து, இதுவரை  முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் ரோஹித் சர்மா.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு பிரியாவிடை அளித்துள்ளது மும்பை அணி நிர்வாகம்.

இதுகுறித்து அந்த அணி தெரிவித்துள்ளதாவது:

‘’ரோஹித் சர்மாவின் ஒப்பற்றை தலைமைக்கு  நன்றி. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்கு  கேப்டனாக அவரது பங்களிப்பு அசாதாரணமானது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியைக் குவித்தது மட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த  கேப்டனாகவும் அவர் இடம்பிடித்துள்ளார்.

அணியை மேலும், வலுப்படுத்த களத்திலும்,  வெளியிலும் அவரின் வழிக்காட்டுதல்களை எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

கோலி, ரோஹித்துக்குப் பிரியாவிடை கொடுக்க முடிவுசெய்துள்ளதா ஆஸி. கிரிக்கெட் வாரியம்?

TNPL 2025: அஸ்வினின் திண்டுக்கல் ட்ராகன்ஸை அடித்து துவைத்த திருப்பூர் தமிழன்ஸ்! 12 ஓவரில் பலே வெற்றி!

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம் மாற்றப்படுகிறதா? முதல்வர் சித்தராமையா தீவிர ஆலோசனை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments