Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய தோனி இப்போது இல்லை… முன்னாள் வீரர் சொன்ன கருத்து!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (10:44 IST)
சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் ஆர்டரில் முன்பாக இறங்கவேண்டும் என ரிதீந்தர் சோதி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் சி எஸ் கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது 40 வயதாகும் அவர் இந்த ஆண்டு சி எஸ் கே அணியை தலைமையேற்று விளையாடுகிறார். இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் ஐபிஎல் விளையாடுவார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த ஆண்டோடு ஓய்வை அறிவித்தாலும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான சோதி கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டிங்கில் எதிரணியைக் கலங்கவைக்க பழைய பினிஷர் தோனி இப்போது இல்லை. அதனால் அந்த ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்பே இறங்க வேண்டும். சில ஓவர்கள் செட்டில் ஆகிவிட்டு அவர் விளையாடுவதற்கு இது வசதியாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments