Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்துக்குப் பிறகு ரிஷப் பண்ட்டின் மனநிலை மாறியுள்ளது… ஷிகார் தவான் பாராட்டு!

vinoth
புதன், 6 நவம்பர் 2024 (08:24 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவருக்கு தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள மீண்டும் சர்வதெசக் கிரிக்கெட்டுக்கு திரும்பி முன்பை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐபிஎல், டி 20 உலகக் கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர்கள் என அனைத்திலும் அவர் பங்களிப்பு மிகச்சிறப்பாக உள்ளது. இந்நிலையில் பண்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஷிகார் தவான் “நான் பண்ட்டை அவரது விபத்துக்குப் பிறகு சந்தித்தேன். அப்போது அவர் தலையில் கட்டோடு பெரிய சிரிப்போடு என்னைப் பார்த்தார். அதுதான் ரிஷப் பண்ட். அவரிடம் இருந்த தன்னம்பிக்கைதான் அவரை மீண்டும் கிரிக்கெட் களத்துக்குள் கொண்டு வந்துள்ளது.

அவர் இப்போது மனதளவில் மிகவும் பலமாக இருக்கிறார். விபத்துக்குப் பின் அவர் வாழ்க்கையைப் பார்க்கும் விதமே மாறியுள்ளது. அவர் எப்போதுமே ஒரு கவலையில்லாத மனிதனாகவே இருப்பார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments