Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு கேட்ச்களை விட்ட பண்ட்… நிதானமாக ஆட்டத்தை தொடரும் ஆஸி!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (11:16 IST)
சிட்னியில் தொடங்கி நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இரண்டு கேட்ச்களை தவற விட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது என்பதும் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இன்று காலை சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் மழையால் சிறிதுநேரம் பாதிக்கபப்ட்ட ஆட்டம் பின்னர் தொடங்கியது.

தேநீர் இடைவேளைக்கு முன்பு வரை 93 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது ஆஸ்திரேலியா.  இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அஸ்வின் ஓவரில் ஒரு கேட்ச்சையும் சிராஜ் ஓவரில் ஒரு கேட்ச்சையும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கோட்டை விட்டதால் இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments