Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடெஜா-ஆண்டர்சன் மோதல் விவகாரம் ஆகஸ்ட் 1இல் விசாரணை - ஐசிசி

Webdunia
புதன், 23 ஜூலை 2014 (17:08 IST)
ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் ஆண்டர்சன் மோதல் தொடர்பாக வரும் ஒன்றாம் தேதி(01-08௨014) விசாரணை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
 
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது, மைதானத்தில் இருந்து வெளியே வந்த ஜடேஜாவை, ஆண்டர்சன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மீதான மோதலை விசாரிக்க தனி விசாரணை ஆணையத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நியமித்துள்ளது.
 
விசாரணை தொடங்கிய 48 மணிநேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது. விசாரணை ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறுவதால், வரும் 27 ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் பங்கேற்க எந்தவித சிக்கலும் இருக்காது எனத் தெரிகிறது.
 
ஒருவேளை விசாரணை முடிவில் ஆண்டர்சன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

Show comments