Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்ட்யா ஓய்வா? ‘ பீதியைக் கிளப்பும் ரவி சாஸ்திரி!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (09:18 IST)
ஹர்திக் பாண்ட்யா 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னால் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் முதல் சீசனிலேயே டைட்டில் பட்டம் வென்றுள்ளது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பாராட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து இப்போது அவர் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ஹர்திக் பாண்ட்யா 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு பாண்ட்யா ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம். அந்த தொடரை மனதில் கொண்டே அவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இப்போதுள்ள வீரர்கள் வரும்போதே எந்த விதமான போட்டிகளில் விளையாடவேண்டும் என்ற தெள்வோடு வருகிறார்கள்.” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் இதுபோல ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments