Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை 40 ஓவர்களாக குறைக்கவேண்டும்’… ரவி சாஸ்திரியின் கருத்து!

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (09:54 IST)
டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கிடைக்கும் அதீத வரவேற்பால் ஒருநாள் போட்டிகளுக்காக ரசிகர்கள் குறைந்து வருகின்றனர்.

டி 20 போட்டிகளின் வரவால் டெஸ்ட் போட்டிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் ஒரு நாள் போட்டிகள் தங்கள் கவர்ச்சியை இழந்து வருகின்றன. பல வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக டி 20 போட்டிகள் மற்றும் லீக் போட்டிகளில் விளையாடி சம்பாதிக்க ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் மீதான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பலரும் ஒருநாள் போட்டிகளை நிறுத்திவிட வேண்டும் எனவும், சிலர் அதில் சில மா
ற்றங்களை செய்தால் மட்டுமே தொடர்ந்து நிலைக்க செய்ய முடியும் எனவும் கூறி வருகின்றனர். இந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி “ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸ்களாக குறைக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றுள்ளது. ஏற்கனவே 60 ஓவர்களாக இருந்த போட்டி 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments