Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இந்த இளைஞன், நம்மை அதிக நாட்கள் வழிநடத்தப் போகிறார்’- ரஜத் படிதாரை உச்சிமுகர்ந்த விராட் கோலி!

vinoth
செவ்வாய், 18 மார்ச் 2025 (07:17 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இந்த முறையாவது ஆர் சி பி அணிக் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் படிதார் பற்றிப் பேசிய விராட் கோலி “அடுத்து வரும் இந்த இளைஞன் நம்மை வெகுநாட்கள் தலைமேற்று வழிநடத்தவுள்ளார். அதனால் அவருக்கு எவ்வளவு அன்பைக் கொடுக்க முடியுமோ அதை நாம் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசில்போடு vs பல்தான்ஸ்: சென்னை சேப்பாக்கத்தில் CSKvMI மோதல்! - டிக்கெட் விற்பனைக்கு கட்டுப்பாடு!

நீங்க அதப் பாத்தீங்களா..? விண்டேஜ் சிக்ஸரை ரி க்ரியேட் செய்த சச்சின்.. பூரித்துப் போன ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!

நான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர்கள் இவர்கள்தான்.. தோனி ஓபன் டாக்!

கோலி சார் இந்தாங்க உங்க கப்..! புண்படுத்துறீங்களே! - வைரலாகும் ஐபிஎல் விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments