Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரெய்னா, ஜடேஜா, பிராவோ மீது சூதாட்ட குற்றச்சாட்டு: லலித் மோடி மீது அவதூறு வழக்கு

ரெய்னா, ஜடேஜா, பிராவோ மீது சூதாட்ட குற்றச்சாட்டு: லலித் மோடி மீது அவதூறு வழக்கு
, செவ்வாய், 30 ஜூன் 2015 (12:46 IST)
ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ ஆகிய 3 வீரர்களும் லஞ்சம் வாங்கியதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித்மோடி கூறிய புகார் ஆதாரமற்றது என்று அவர் மீது  அவதூறு வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ ஆகிய 3 வீரர்களும் ரியல் எஸ்டேட் அதிபரும், சூதாட்ட தரகருமான பாபா திவானிடம் தலா ரூ.20 கோடி பணம் மற்றும் பிளாட்டை லஞ்சம் பெற்றதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித்மோடி புகார் கூறியிருந்தார்.
 
இது குறித்து அவர் 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) கடிதம் எழுதி இருந்தார். அவர் தகவல் அனுப்பியிருந்ததை ஐசிசி யும் உறுதி செய்தது.
 
இந்நிலையில், லலித்மோடியின் இந்த சூதாட்ட குற்றச்சாட்டை கிரிக்கெட் வாரியம் நேற்று நிராகரித்தது. மேலும் ஐசிசி யும் 3 வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அறிவித்துள்ளது.
 
புகார் கூறப்பட்ட வீரர்களுக்கு எதிராக ஆதாரம் இருந்திருந்தால் ஐசிசி ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக அந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும் என்றும், 2 ஆண்டுகளாக அத்தகையை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
 
அந்த வீரர்களும் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டியில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது என்று தெரிவித்தன என்று ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
இந்நிலையில், தங்களது நேர்மை குறித்து கேள்வி எழுப்பிய லலித்மோடி மீது 3 வீரர்களும் அவதூறு வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil