Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? – ராகுல் டிராவிட் விளக்கம்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (11:27 IST)
இந்திய அணியில் நீண்ட காலம் கழித்து தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிறப்பான பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் விளங்குபவர் தினேஷ் கார்த்திக். கடந்த பல சீசன்களாக ஐபிஎல்லில் சிறப்பான விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுபயண ஆட்டங்கள் உள்ளிட்டவற்றில் இடம் பெறாமல் இருந்தது அவரது ரசிகர்களுக்கு ஒரு குறையாக இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் நிலையாக விளையாடி உள்ளார். எந்த அணிக்காக விளையாடினாலும் தனது முழு பங்களிப்பை செலுத்தியுள்ளார். அதனாலேயே இந்திய அணிக்கு விளையாட அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments