Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்கு சென்றாரா டிராவிட்?

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (16:14 IST)
ஜூனியர் உலககோப்பை போட்டியை வென்று இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருதப்படுகிறார். 
 
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேனேஜரான முன்னாள் வீரர் நதீம் கான், வீரர்கள் அறைக்கு வந்த இந்திய அணியின் கோச் டிராவிட், பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆறுதல் கூறி பாராட்டினார் என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் நதீம் கானின் கூற்றை வைத்து நிருபர் ஒருவர் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திராவிட் சென்றார் என்பது போல் கேள்வி எழுப்பினார். இது குறித்து ராகுல் திராவிட் விளக்கமளித்துள்ளார்.  
 
டிராவிட் கூறியதாவது, நான் பாக். வீரர்கள் ஓய்வறைக்கு செல்லவில்லை. அவர்களிடம் திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தார். நான் அவரை வாழ்த்தினேன், அதுவும் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்கு வெளியே நின்றுதான் வாழ்த்தினேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments