Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹானேவுக்கு எந்த அழுத்தமும் இருக்காது – சுனில் கவாஸ்கர் கருத்து!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (18:17 IST)
இந்திய அணியை கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்துவதில் ரஹானேவுக்கு எந்த அழுத்தமும் இருக்காது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட்டுக்கு மட்டுமே கோலி தலைமை தாங்குவார். அதன் பிறகு அவர் தனது மனைவியின் பிரசவத்துக்காக இந்தியா திரும்ப உள்ளார். இதனால் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாக்க செயல்படவுள்ளார்.

இந்நிலையில் மூன்று போட்டிகளில் தலைமை தாங்குவதால் ரஹானேவுக்கு எந்த அழுத்தமும் இருக்காது என இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ‘ரஹானே ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். அந்த இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்றுள்ளது. அதனால் அவருக்கு எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என தெரியும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

வெளுத்து கட்டிய ஸ்ரேயாஸ் அய்யர்.. இறுதிப்போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு..!

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments