Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனிடமே முறைத்த இளம் வீரர்… மைதானத்தை விட்டு வெளியேற்றிய ரஹானே!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (08:56 IST)
இந்தியா தென் மண்டலம் மற்றும் மேற்கு மண்டல அணிகள் மோதிய துலிப் கோப்பை போட்டி நேற்று முடிந்தது.

இந்த போட்டியில் மேற்கு மண்டல இளம் வீரர் யாசஸ்வி ஜெய்ஸ்வால் எதிரணி வீரரான ரவி தேஜாவிடம் அநாகரிகமாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். இதுபற்றி நடுவர் கேப்டன் ரஹானேவிடம் முறையிட்டார். அப்போது இதுகுறித்து ரஹானே அவரிடம் சென்று பேசியபோது அவர் கேப்டனுக்கும் உரிய மரியாதை தராமல் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டார்.

இதையடுத்து ரஹானே அவரை மைதானத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் துணிச்சலாக இந்த நடவடிக்கையை மேற்கொண்ட ரஹானேவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்ததற்காக ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments