இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதல் பேச்சு! – இங்கிலாந்து டெஸ்ட்டில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (09:24 IST)
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய வீரர்களை இனவெறியோடு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையே ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் ரோகித் ஷர்மா விளையாடாத நிலையில் ஜாஸ்பிரித் பும்ரா கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்த போட்டியின் 4வது நாள் ஆட்டத்தின்போது இந்திய வீரர்களை மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை ஏற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments