Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர்களுக்கு தண்டால் எடுக்க தடை

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (18:05 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் மைதனத்தில் தண்டால் எடுக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.


 

 
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிப் பெற்றாலோ அல்லது வீரர்கள் சதம் அடித்தாலோ தண்டால் எடுப்பதை சமீப காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
 
இவர்களின் இந்த செயல் ரசிகர்களை கவர்ந்தாலும் பலரிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தது. கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் சதம் அடித்த மிஸ்பா உல்ஹாக் மைத்தானத்தில் தண்டால் எடுத்தார்.
 
அதைத்தொடர்ந்து பல்வேறு வீரர்களும் தண்டால் எடுப்பதை நடைமுறையாக பின்பற்றி வந்ததால் சர்ச்சையானது. இதனால் அரசியல் தலைவர்கள் பலரும் கேள்விகள் எழுப்பினர்.
 
ஆகையால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் தண்டால் எடுப்பதற்கு தடை விதித்தது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments