Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் அந்த காயங்கள் ஆறவில்லை… புஜாரா சொன்ன சீக்ரெட்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:02 IST)
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை என்று புஜாரா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. ஒரு நாள் தொடரை இழந்தாலும் டி 20 மற்றும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய புஜாரா அணியை நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கரைதேற்றினார். அந்த இன்னிங்ஸில் ஆஸி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பல பந்துகள் அவரின் உடலை தாக்கின.

இந்நிலையில் இப்போது அந்த இன்னிங்ஸ் குறித்து பேசியுள்ள புஜாரா ‘ அந்த  இன்னிங்ஸ் நான் விளையாடியதிலேயே மிகவும் கடினமானது. விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் நாங்களோ விக்கெட்டை இழக்கக் கூடாது என்ற முடிவில் ஆடினோம். அதனால் அவர்கள் மேல் அழுத்தம் கூடியது. ஆடுகளத்தின் ஒரு முனையில் பந்து வேகமாக எழும்பியது. அந்த முனையில்தான் நான் அதிகமாக அடிவாங்கினேன். இன்னும் அந்த காயங்கள் ஆறவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments