Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவுட் ஆஃப் பார்ம்: பொங்கி எழுந்த புஜாரா!

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (18:04 IST)
இந்தியாவின் அடுத்த டிராவிட் என்று புகழப்பட்ட புஜாரா தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடினாலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. 
 
இந்நிலையில், அவர் அவுட் ஆஃப் பார்ம் ஆகிவிட்டாரா என கேட்கப்பட்டதற்கு பின்வருமாரு பதிலளித்தார். ஒரு தனி நபராக என் மீதே நான் அதிக அழுத்தம் கொடுத்து கொள்ளக் கூடாது, நான் என்னை தவிர எதையும் யாருக்காகவும் என்னை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்று உணர்கிறேன்.
 
பெரிய பெரிய சதங்களை எடுப்பது எனது நோக்கமில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை எடுக்க விரும்புவேன். ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் பிட்ச்கள் சவாலானவை, அவுட் ஆகும் தருணங்கள் அதிகம். உத்தியில் சிறுசிறு மாற்றங்கள் தேவை.
 
எனக்கு அதற்கான பொறுமை இருக்கிறது என்றே கருதுகிறேன். சவாலான சில பிட்ச்களில் ஆடியுள்ளேன். தென் ஆப்பிரிக்காவில் ஜோஹான்னஸ்பர்கில் ஆடும்போது மிகமிகக் கடினமான பிட்ச். ஆனாலும் அதில் அரைசதம் எடுத்தேன். ஆகவே இங்கிலாந்திலும் ரன்கள் எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments