Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சஞ்சய் பங்கரை கெட்ட வார்த்தையில் திட்டிய பிரீத்தி ஜிந்தா

சஞ்சய் பங்கரை கெட்ட வார்த்தையில் திட்டிய பிரீத்தி ஜிந்தா
, வியாழன், 12 மே 2016 (18:25 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரை பஞ்சாப் அணியின் உரிமையளரான நடிகை பிரீத்தி ஜிந்தா கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கடந்த திங்கள் கிழமை அன்று பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி மூலம் அந்த அணி அரையிறுதிக்குள் நுழைய முடியாத நிலை உருவாகி உள்ளது.
 
இதுவரை ஆடிய 10 போட்டிகளில் பஞ்சாப் அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றாலும் அந்த அணி அரையிறுதிக்குள் நுழைய முடியாது.
 
இந்நிலையில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால், ஆந்திரமடைந்த பிரீத்தி ஜிந்தா வேகமாக வந்து பஞ்சாப் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று, பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கரை ஆங்கிலத்தில் மோசமான கெட்ட வார்த்தையால் திட்டினார்.
 
வெளிநாட்டு வீரர்கள், இளம் வீரர்கள் முன்னிலையில் பயிற்சியாளரை கெட்ட வார்த்தையால் பிரீத்தி ஜிந்தா திட்டியது, கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் மரணம்