Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரி வழங்கும் வள்ளலாக மாறிய பிரசித் கிருஷ்ணா… நேற்றைய போட்டியில் படைத்த மோசமான சாதனை!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (10:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டி-20 போட்டி நேற்று கௌகாத்தியில் நடந்தது.  இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் இந்திய அணி ருத்துராஜின் அபாரமான சதத்தின் மூலம் 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

இதையடுத்துக் களமிறங்கிய ஆஸி அணியும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வேல் கடைசி வரை களத்தில் நின்று 48 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து அந்த அணியை வெற்றி பெறவைத்தார். இதன் மூலம் கடைசி பந்தில் ஆஸி அணி இலக்கை எட்டி தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தாராளமாக ரன்களை வாரி வழங்கினார். கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்துவீசிய அவர் ஓவரை கிளன் மேக்ஸ்வெல் பதம் பார்த்தார். மொத்தம் நான்கு ஓவர்கள் வீசிய பிரசித் கிருஷ்ணா 68 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments