வாரி வழங்கும் வள்ளலாக மாறிய பிரசித் கிருஷ்ணா… நேற்றைய போட்டியில் படைத்த மோசமான சாதனை!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (10:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டி-20 போட்டி நேற்று கௌகாத்தியில் நடந்தது.  இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் இந்திய அணி ருத்துராஜின் அபாரமான சதத்தின் மூலம் 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

இதையடுத்துக் களமிறங்கிய ஆஸி அணியும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வேல் கடைசி வரை களத்தில் நின்று 48 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து அந்த அணியை வெற்றி பெறவைத்தார். இதன் மூலம் கடைசி பந்தில் ஆஸி அணி இலக்கை எட்டி தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தாராளமாக ரன்களை வாரி வழங்கினார். கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்துவீசிய அவர் ஓவரை கிளன் மேக்ஸ்வெல் பதம் பார்த்தார். மொத்தம் நான்கு ஓவர்கள் வீசிய பிரசித் கிருஷ்ணா 68 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments