Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் தலைமையில் விளையாடுவது சாதாரணமான ஒன்றுதான்… ரோஹித் ஷர்மா கருத்து!

vinoth
வெள்ளி, 3 மே 2024 (15:34 IST)
குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

இது சம்மந்தமாக ரோஹித் ஷர்மா எந்த ஒரு கருத்தையும் சொல்லாத ரோஹித் ஷர்மா இப்போது இதுபற்றி பேசியுள்ளார். அதில் “மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடுவது சாதாரணமான ஒன்றுதான். நான் நிறைய கேப்டன்கள் கீழ் விளையாடி இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஆனாலும் ரோஹித் ஷர்மாவுக்கு தான் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் உடன்பாடு இல்லை என்றும் அவர் அடுத்த சீசனில் ஏலத்தின் மூலம் வேறு அணிக்கு செல்லவே விரும்புகிறார் என்றும் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments