Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி மாதிரி ஐபிஎல்ல மட்டும விளையாட ப்ளான்! – ஓய்வு குறித்து மிட்செல் ஸ்டார்க் சூசகம்!

Prasanth Karthick
திங்கள், 27 மே 2024 (19:19 IST)
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் தனது ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்துள்ளார்.



ஐபிஎல் நடப்பு ஆண்டு சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எளிதாக வீழ்த்தி கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய மிட்செல் ஸ்டார்க் 3 ஓவர்களில் 14 ரன்களே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ப்ளேயர் ஆப் தி மேட்ச் வென்றார்.

மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ.20 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. இந்நிலையில் வெற்றிக்கு பின் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க், தான் இன்னும் எத்தனை ஆஸ்திரேலிய போட்டிகளில் இடம்பெறுவேன் என்பது தெரியவில்லை என்றும், சில வகை போட்டிகளில் இருந்து விலகிவிட்டு குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஐபிஎல் உள்ளிட்ட ப்ரான்சைஸ் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், கொல்கத்தா அணியில் தொடர்ந்து தான் நீடிப்பேன் என நம்புவதாகவும் கூறியுள்ளார். இதனால் விரைவில் ஸ்டார்க் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்க உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

177 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. மழை வந்ததால் ஏற்பட்ட திருப்பம்..!

கடைசி 5 ஓவர்களில் பேயாட்டம் ஆடும் ரிங்கு சிங்… சீனியர் வீரர்களை ஓரம்கட்டி படைத்த சாதனை!

முதல் பந்தாக இருந்தாலும் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்வேன்.. ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா கருத்து!

அதிரடி பதிலடி! 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments