இந்திய அணியை மீண்டும் வம்புக்கிழுத்த பீட்டர்சன் !

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (22:22 IST)
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சரித்திரச் சாதனை படைத்தது. இதனால் இந்திய அணி பெரும் மகிழ்ச்சி அடைந்தது. இந்திய இளம் வீரர்களுக்கு உலகளவில் பெரும் பாராட்டுகள் குவிந்தது.

அப்போது  இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன், இந்திய அணியினர் ரொம்ப ஆட வேண்டும். இனிமேல் தான் உண்மையான கிரிகெட் விளையாடவுள்ளனர் என எச்சரித்தார்.

இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேபோல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இங்கிலாந்து அணியுடன் மோத தயாராகவுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்றது.

தற்போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன், தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் மிந்திய அணியை சீண்டியுள்ளார்.

அதில்,ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதற்காக நீங்கள் கொண்டாட வேண்டாம் என ஏற்கனவே எச்சரித்திருந்தேன்..ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்டு,இந்திய அணியின் தோல்வியை அவர் விமர்சித்துள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அவர் மீது கடுப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments