Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி விக்கெட்டை வீழ்த்திய போது மைதானத்தில் நிலவிய அமைதி… பேட் கம்மின்ஸ் நெகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (08:08 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை இறுதி போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து கோலியின் பேட் எட்ஜில் பட்டு ஸ்டம்ப்பில் அடிக்க விக்கெட் இழந்தார் விராட் கோலி. விராட் கோலியின் விக்கெட் போன அந்த சமயம் மொத்த க்ரவுண்டுமே கனத்த மௌனத்தில் ஆழ்ந்தது.

இந்த தருணம் குறித்து பேசியுள்ள பேட் கம்மின்ஸ் “கோலியின் விக்கெட்டை எடுக்கும் போது மைதானத்தில் அமைதி நிலவியது. அந்த தருணம் நான் மைதானத்தில் அனுபவித்த இனிமையான தருணங்களில் ஒன்று. அப்போது நிலவிய அமைதி எனக்கு திருப்திகரமான ஒன்று.” எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “நான் தங்கியிருந்த ஹோட்டல்களில் ஏராளமான இந்திய ரசிகர்கள் இருந்தார்கள். அவர்கள் நீல நிற டீஷர்ட் அணிந்து மைதானத்துக்கு சென்றனர். அப்போது நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். ஆனால் அன்று மாலை நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?

ஐபிஎல்ல 300 ரன் அடிக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்ல..! - ரிங்கு சிங் கருத்து!

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments