Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து பவுலர்களிடம் பெட்டி பாம்பாய் அடங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்… இலக்கு இதுதான்!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (15:17 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்துள்ளது.

டி 20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் மெல்போர்னில் தற்போது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பந்துவீச்சில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களைக் கைப்பற்றி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை ஸ்கோர்களை சேர்க்க விடாமல் பார்த்துக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணியில் அதிக பட்சமாக ஷான் மசூத் 38 ரன்களும், பாபர் ஆசாம் 32 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் பாக் அணி 8 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 

தொடர்புடைய செய்திகள்

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments