Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து பவுலர்களிடம் பெட்டி பாம்பாய் அடங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்… இலக்கு இதுதான்!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (15:17 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்துள்ளது.

டி 20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் மெல்போர்னில் தற்போது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பந்துவீச்சில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களைக் கைப்பற்றி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை ஸ்கோர்களை சேர்க்க விடாமல் பார்த்துக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணியில் அதிக பட்சமாக ஷான் மசூத் 38 ரன்களும், பாபர் ஆசாம் 32 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் பாக் அணி 8 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments