Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவை பாரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

இந்தியாவை பாரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

இந்தியாவை பாரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்
, ஞாயிறு, 13 மார்ச் 2016 (20:48 IST)
பாதுகாப்பு குறைபாடு காரணமாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வர தாமதமானது. இந்திய கிரிக்கெட் சங்கம் அளித்த உறுதியை அடுத்து பாகிஸ்தான் அணி நேற்று இந்தியா வந்தது.


 
 
இந்நிலையில் இந்தியா வந்த பாகிஸ்தான் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியாவின் பாதுகாப்பையும், இந்தியர்களின் அன்பையும் வெகுவாக பாராட்டினர்.
 
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி தனது நாட்டில்கூட இவ்வளவு அன்பை தான் அனுபவித்தது இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கிடைக்கும் மகிழ்சியை வேறு எந்த நாட்டிலும் அனுபவித்ததில்லை என்று தெரிவித்தார். பாகிஸ்தானைப் போல் இங்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அதிகம் இருக்கின்றனர் என்றார்.
 
இதேப்போல் சோயப் மாலிக் பேசுகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிக பிரமாதமாக செய்த இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்தார். மேலும் என் மனைவி சானியா மிர்சாவை நான் அடிக்கடி இந்தியா வந்து சந்தித்து சென்றேன். ஆனால், ஒருபோதும் நான் பாதுகாப்பு குறைபாட்டை உணர்ந்ததில்லை என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil