Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக முடிவு?

vinoth
செவ்வாய், 12 நவம்பர் 2024 (14:38 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியது.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து “இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடவில்லை என்றால் நாங்கள் இந்த தொடரை நடத்துவதைக் கைவிடுகிறோம்” என அறிவித்துள்ளது. இதனால் ஐசிசி தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றும் ஆலோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்படி வேறு நாட்டுக்கு மாற்றினால் தாங்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடக்குமா? அதில் பாகிஸ்தான் கலந்துகொள்ளுமா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments