Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசா பிரச்சனையால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த இங்கிலாந்து வீரர்!

vinoth
புதன், 24 ஜனவரி 2024 (09:08 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சோயிப் பஷிர் என்ற 20 வயது சுழல்பந்து வீச்சாளர் விசா பிரச்சனைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

விசா கிடைக்காத காரணத்தால் அவர் அபுதாபியில் இருந்து இப்போது லண்டனுக்கு சென்றுள்ளார். அங்குள்ள இந்தியா ஹைகமிஷனிடம் இதுகுறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “தனது அறிமுகப் போட்டிக்கு முன்பாக ஒரு இளம் வீரர் இத்தகையை சூழலை எதிர்கொள்வது எனக்கு வருத்தமாக உள்ளது. அவருக்காக நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். நாங்கள் எங்கள் அணியை டிசம்பர் மத்தியிலேயே அறிவித்தோம். ஆனால் விசா இல்லாமல் அவர் நாடு திரும்பியுள்ளார்.  இது துரதிர்ஷ்டவசமானது. அவர் இங்கு வரமுடியாததால் அவரால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments