Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (07:22 IST)
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில்  பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.


 
 
மூன்று போட்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகித்தன. இந்நிலையில் கோப்பையை உறுதி செய்யும் மூன்றாவது மற்றும் கடை ஒரு நாள் போட்டி ஹராரேயில் நேற்று நடைபெற்றது.
 
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஜிம்பாவேவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் நிதானமாக விளையாடினர்.
 
அதிகபட்சமாக அந்த அணி வீரர் முட்டம்பாமி 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 161 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணி ஆட்டமிழந்தது.
 
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடியது. 34 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

Show comments