Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேகப்பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பலி

வேகப்பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பலி
, செவ்வாய், 27 ஜனவரி 2015 (11:12 IST)
பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கி, வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் பந்து வீசியுள்ளார். அப்போது 18 வயது இளம் வீரர் ஜீஷன் முகமதுவின் மார்பகப் பகுதியை பந்து தாக்கியுள்ளது.
 

 
இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் முன்பே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சியடை வைத்துள்ளது.
 
இதே போன்று கடந்த நவம்பர் 27ஆம் தேதி, ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுக்ஸ் கிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கியதால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil