Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறப்புப் பரிசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 7 மே 2024 (07:26 IST)
இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி எதிர்பார்ப்புக்கு மாறாக மிகவும் மோசமாக விளையாடியது. அதனால் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மாற்றப்பட்டு ஷகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரு சில மாதங்களிலேயே அவரும் நீக்கப்பட்டு மீண்டும் பாபரே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அமெரிக்காவில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையை வெல்ல முக்கியத்துவம் காட்டி வருகிறது. இதற்காக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி வீரர்கள் அனைவருக்கும் விருந்து வைத்தார். அப்போது கலந்துகொண்ட வீரர்களிடம் “எதைப் பற்றியும் கவலைப் படாதீர்கள், கோப்பையை வென்று வாருங்கள். கோப்பை நமக்குதான். பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் 83 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றே ஓவர்களில் மலேசியா அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி.. அபார வெற்றி..!

என் பசி இன்னும் அடங்கவில்லை… இந்திய அணிக்காக விளையாடுவது முகமது ஷமி கருத்து!

கொல்கத்தா அணியை விட்டு விலகியது இதனால்தான்… ஸ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்!

கோலி அரிதான வீரர்… அவர் ஃபார்ம் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை – கங்குலி ஆதரவு!

ரோஹித் ஷர்மான்னா அன்பு… புகழ்ந்து தள்ளிய ரிஷப் பண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments