Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாம் எங்கு தொடங்கியதோ, அங்கேயே திரும்ப வந்திருக்கிறேன் – பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்த நடராஜன்!

vinoth
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (14:25 IST)
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன் டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி, அதில் பிரகாசித்து பின்னர் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதற்கு அவரின் காயமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இப்போது மீண்டு வந்துள்ளார். தற்போது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவர் இந்திய அணியில் ஆடத்தகுதியான வீரராக இருந்தபோதும் அவருக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் தேர்வுக்குழுவில் அரசியல் நடப்பதாகவும் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடராஜன் தற்போது தான் படித்த அரசு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து “எல்லாம் எங்கு தொடங்கியதோ அங்கேயே திரும்பியதில் மகிழ்ச்சி. என்னை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு அரசு மேனிலைப் பள்ளி, சின்னப்பம்பட்டிக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

3வது ஒருநாள் போட்டி.. 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. தெ.ஆ. பரிதாபம்..!

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments