Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டுக்காக முதல் தொடர் வெற்றி – நடராஜன் டிவிட்டரில் நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (10:17 IST)
இந்திய அணியில் தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இந்திய அணி டி 20 தொடரை வென்றது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 தொடரையும் வென்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். முதல் போட்டியில் 3 விக்கெட்களை எடுத்த நடராஜன், இரண்டாவது போட்டியில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆஸி அணி 194 ரன்கள் குவித்த இன்னிங்ஸில் நடராஜன் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடர் வெற்றி குறித்து டிவிட்டரில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார் நடராஜன். அதில் ‘என் நாட்டுக்காக நான் கலந்துகொண்ட முதல் தொடரே வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.’ எனத் தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடி வரும் நடராஜன் இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்வார் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments