Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இக்கட்டான சூழலில் தவிக்கும் ரோகித் சர்மா

இக்கட்டான சூழலில் தவிக்கும் ரோகித் சர்மா
, புதன், 29 ஜூலை 2015 (09:36 IST)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா தனது டெஸ்ட் வாழ்க்கையில் பெரிதாக பிரகாசிக்க முடியாமல் திணறி வருகிறார்.
 
பொதுவாக ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் அனைத்து ரக போட்டிகளிலும் பங்குபெற வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருப்பர். ஆனால் ஒரு சில வீரர்களுக்கே இந்த மகத்தான வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும்  ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் சொதப்பி கொண்டு வருகிறார். மேலும் டெஸ்ட் போட்டியில் 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் ரோகித் சர்மாவின் டெஸ்ட் நிலையை பார்த்தால் சற்று பயமாகதான் உள்ளது. இவர் கடைசியாக பங்கேற்ற 2 போட்டியில் வெறும் 53, 39 மற்றும் 6 ரன்களை குவித்துள்ளார். ஒருவேளை ரோகித்சர்மாவால் இலங்கை டெஸ்ட் தொடரில் பிரகாசிக்க முடியவில்லை என்றால் அவரின் டெஸ்ட் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதில் சந்தேகமில்லை.
 
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில், தற்போது எனது டெஸ்ட் வாழ்க்கை இக்கட்டான சூழலில் உள்ளது. ஒவ்வொரு வீரரும் டெஸ்ட் போட்டியில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ஒரு நாள் போட்டியில் சிறந்து விளங்கிவது போல் டெஸ்டிலும் செயல்படுவேன்  என்றார்.
 
மேலும் இந்திய டெஸ்ட் அணியை மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு அழைத்து செல்வதே எனது நோக்கம் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil