Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினேஷ் கார்த்திக்கை பாராட்ட மறந்த முரளி விஜய்: ரசிகர்கள் கொதிப்பு

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (19:04 IST)
தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை பாராட்ட மறந்த இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்யை ரசிகர்கள் வறுத்தெடுக்க துவங்கியுள்ளனர்.

 
 
சமீபத்தில் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
 
19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அவர் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் அவரை சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் பாராட்டினர்.
 
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 
 
“கவனிக்கத்தக்க பெருமைக்குரிய வெற்றி, என்ன வகையான கிரிக்கெட்டை நாம் ஆடிவருகிறோமோ அதனை மாதிரியாகக் கொண்டது” என்று வாழ்த்து தெரிவித்தார்.
 
இந்த பதிவில் அவர் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த தினேஷ் கார்த்திக்கை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் முரளி விஜய் மீது கோபமடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த கட்டுரையில்
Show comments