Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வான்கடே மைதானத்தில் “தல” தோனிக்கு சிலை! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (12:18 IST)
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனிக்கு வான்கடே மைதானத்தில் சிலை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவராக இருந்து வருபவர் மகேந்திரசிங் தோனி. 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அணியின் கேப்டனாக செயல்பட்டதோடு, சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற செய்தவர் தோனி. தோனிக்கு இந்தியா முழுவதும் அதிகமான ரசிகர்கள் உண்டு என்றாலும் தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளை காட்டிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் அவரை செல்லமாக ‘தல’ தோனி என்று அழைப்பதே வழக்கம்.

தற்போது அனைத்து வித போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதிலும் ரசிகர்களால் தொடர்ந்து சிஎஸ்கே அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார் தோனி. கடந்த 2011ம் ஆண்டில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் இறுதி பந்தில் தோனி அடித்த சிக்ஸர் இந்திய ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதது.

அந்த சிக்ஸர் போஸை சிலையாக மும்பை வான்கடே மைதானத்தில் அமைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த சிலையை தோனி கையாலேயே திறக்க வைக்க முடிவு செய்து தோனியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாம். தோனிக்கு சிலை அமைக்க உள்ள இந்த செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments