Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க அதை செஞ்சிருந்தா நேத்து ஜெயிச்சிருப்போம்! – மனம் நொந்த தோனி!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (08:47 IST)
நேற்றைய ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சன் ரைஸர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து கேப்டன் தோனி கூறியுள்ளார்.

கடந்த மூன்று ஆட்டங்களில் ஒரு முறை மட்டுமே வென்று பிறகு தொடர் தோல்வியை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியிலும் தோல்வியை தழுவியது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது.

முதலில் பேட்டிங் செய்த சன் ரைஸர்ஸ் 164 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவதாக பேட்டிங் செய்த சிஎஸ்கே 157 ரன்களில் ஆட்டமிழந்தது. 7 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவின் வெற்றி பறிபோனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள சிஎஸ்கே கேப்டன் தோனி ”என்னால் நிறைய பந்துகளை சரியாக மிடில் செய்யமுடியவில்லை. எப்படியாவது அடித்து நொறுக்க வேண்டும் என எண்ணியது காரணமாக இருக்கலாம். நாங்கள் நிறைய விஷயங்களை சரிசெய்து கொள்ள வேண்டி இருக்கிறது. 16வது ஓவருக்கு பிறகு செய்த தவறையே திரும்பவும் செய்தோம். ஒட்டுமொத்தமாக ஆட்டத்தின் திறன் இன்னும் மேம்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments