Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுதந்திர கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது போட்டியில் இந்தியா வெற்றி

சுதந்திர கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது போட்டியில் இந்தியா வெற்றி
, வியாழன், 15 அக்டோபர் 2015 (06:55 IST)
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 
 
இந்தியா -  தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்றது.
 
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தொடக்கம் முதலே தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திய  இந்திய  அணியின் முன்கள வீரர்கள், தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நடையை கட்டினர்.  
ஒரு புறம் விக்கெட் சரிய மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் தோனி 92 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்   9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 43.4 ஓவரின் போது தென் ஆப்பிரிக்க அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்ததால், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil