Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எகிறும் எதிர்ப்பார்ப்பு: என்ன செய்யப்போகிறார் கோலி??

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (13:20 IST)
கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அடுத்து நடைபெறவுள்ள தென் ஆப்ரிக்காவுடனான தொடரால் அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்திய அணி, முதன் முறையாக தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது கிடையாது. எனவே, கோலி தலைமையிலான இந்திய அணி மீது அதிக நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடர் இந்திய வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். மேலும், வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற நிலைத்தன்மை முக்கியமானது. 
 
இந்தய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறும். தற்போதைய இந்திய அணியில் உள்ள வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியாது என்பதற்கான எந்த காரணத்தையும் நான் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
 
அதேபோல், முன்னாள் இந்திய அணி கேப்டன் கபிள் தேவ், தென் ஆப்பிரிக்கா என்றாலும் சரி ஆஸ்திரேலியா என்றாலும் சரி. இந்திய அணி கேப்டன், அணியை எப்படி இயக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார். 
 
அணிக்கு இருக்கும் ஒரே பிரச்சினை, ஆடும் லெவனில் யார் யாரை களம் இறக்குவது என்பதுதான். எந்தவொரு அணியையும் வெற்றி பெற முடியும் என்ற நிலையை இந்திய அணி அடைந்துள்ளதாக நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை.. 229 ரன்கள் இலக்கு..!

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments