நேற்றைய போட்டியில் இதைக் கவனீச்சிங்களா?... வார்னர் & மார்ஷ் படைத்த சாதனை!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (13:46 IST)
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும்  மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

டேவிட் வார்னர் 124 பந்துகளில் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்தார். இருவரும் அவுட் ஆனதும் ஆஸி அணியின் பேட்டிங் நிலை குலைந்தது.

இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் இணைந்து 18 சிக்ஸர்களை விளாசினர். இதன் மூலம் அதிக சிக்ஸர்கள் விளாசிய தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை நூலிழையில் மிஸ் செய்த விராத் கோஹ்லி.. இந்தியா அபார வெற்றி..!

நியூசிலாந்து கொடுத்த 301 ரன்கள் இலக்கு.. ரோஹித் சர்மா அவுட்.. இலக்கை எட்டுமா இந்தியா..!

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் - பாபர் அசாம்.. ஆனால் எதிர்பாராமல் ஏற்பட்ட துரதிஷ்டம்..!

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்.. திடீரென விலகிய ரிஷப் பண்ட்.. என்ன காரணம்?

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.. பயிற்சியில் விராத் கோஹ்லி..!

அடுத்த கட்டுரையில்
Show comments