மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட மயங்க் அகர்வால்.. ரஞ்சி தொடருக்காக மீண்டும் அணியில் இணைப்பு!

vinoth
புதன், 7 பிப்ரவரி 2024 (13:53 IST)
இந்திய அணிக்காக விளையாடிய மயங்க் அகர்வால் சமீபகாலமாக வாய்ப்புக் கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையில் கர்நாடக அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.  ரஞ்சி போட்டியில் விளையாடுவதற்காக அவர் திரிபுராவின் அகர்தலாவுக்கு விமானத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவர் இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் வாய் மற்றும் வயிற்றில் எரிச்சலை உணர்ந்துள்ளார். விமானத்திலேயே வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அகர்தலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது. ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக சொல்லப்பட்டது.

ஆனாலும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் இப்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு கர்நாடக அணியோடு இணைந்துள்ளார். அடுத்து தமிழக அணியோடு நடக்க உள்ள போட்டியில் அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments