Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட மயங்க் அகர்வால்.. ரஞ்சி தொடருக்காக மீண்டும் அணியில் இணைப்பு!

vinoth
புதன், 7 பிப்ரவரி 2024 (13:53 IST)
இந்திய அணிக்காக விளையாடிய மயங்க் அகர்வால் சமீபகாலமாக வாய்ப்புக் கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையில் கர்நாடக அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.  ரஞ்சி போட்டியில் விளையாடுவதற்காக அவர் திரிபுராவின் அகர்தலாவுக்கு விமானத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவர் இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் வாய் மற்றும் வயிற்றில் எரிச்சலை உணர்ந்துள்ளார். விமானத்திலேயே வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அகர்தலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது. ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக சொல்லப்பட்டது.

ஆனாலும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் இப்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு கர்நாடக அணியோடு இணைந்துள்ளார். அடுத்து தமிழக அணியோடு நடக்க உள்ள போட்டியில் அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments