ஒரு கேட்ச்சால் போட்டியின் விதியே மாறியது… ஆப்கான் கேப்டன் ஆதங்கம்!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (06:58 IST)
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று மும்பையில் நடந்த போட்டி, இந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்து வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் ஆஸி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் கிளன் மேக்ஸ்வெல். அவர், 128 பந்துகளில் 201 ரன்கள் சேர்த்து ஆஸி அணியை வெற்றி பெறவைத்தார்.

இந்த போட்டியில் அவர் தொடக்கத்தில் எளிதான கேட்ச் வாய்ப்பை ஆப்கன் அணியினர் தவறவிட்டனர். அதனால் போட்டியின் தலைவிதியே மாறியது. போட்டி முடிந்ததும் இதைக் குறிப்பிட்டு பேசிய ஆப்கன் கேப்டன் “கேட்ச்சை விட்டதுதான் எங்களின் தோல்விக்கு மிக முக்கியமானக் காரணமாக அமைந்தது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments