Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

vinoth
திங்கள், 7 ஏப்ரல் 2025 (07:17 IST)
கடந்த சில ஆண்டுகளாக சி எஸ் கே அணி ரசிகர்களைப் பொறுத்தவரை அணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தோனி கடைசியாக ஒரு சிக்ஸர் அடித்து விட்டால் ‘பைசா வசூல்’ எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் இந்த சீசனில் தோனிதான் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு ஆதங்கத்தில் உள்ளனர்.

இதனால் அவர் ஓய்வு பெறவேண்டும் என்று ரசிகர்களே இப்போது அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆனால் தோனியைக் காரணமாகக் காட்டிதான் சி எஸ் கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது என்பது பலரும் அறிந்த ஒன்று. தோனி இல்லாவிட்டால் சி எஸ் கே அணிக்காக ஆதரவு பல மடங்காகக் குறையும் என்பதும் வெட்ட வெளிச்சமானது.

இந்நிலையில் தோனி பற்றி பேசியுள்ள முன்னாள் சி எஸ் கே அணி வீரர் மேத்யு ஹெய்டன் “தோனி எங்களுடன் கமெண்ட்ரி பாக்ஸில் வந்து அமரவேண்டும். அவர் தன்னுடையக் கிரிக்கெட்டை இழந்துவிட்டார். மிகவும் கால தாமதம் ஆவதற்கு முன்னால் அதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments