Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முட்கல் விசாரணையில் சீனிவாசன், தோனி கூறியதன் எழுத்துப்படியைக் கேட்டு பிசிசிஐ மனு!

முட்கல் விசாரணையில் சீனிவாசன், தோனி கூறியதன் எழுத்துப்படியைக் கேட்டு பிசிசிஐ மனு!
, புதன், 9 ஏப்ரல் 2014 (12:50 IST)
ஐபிஎல். சூதாட்ட விசாரணையை மேற்கொண்ட நீதிபதி முட்கல் கமிட்டியிடம் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மற்றும் சென்னை அணி கேப்டன் தோனி கூறியதன் ஆடியோ எழுத்த்குப்படியை கேட்டு பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
 
அதேபோல் ஐபிஎல். தலைமை ஆபரேட்டிங் ஆபீசர் சுந்தர் ராமன் கூறியதன் எழுத்துப்படியையும் பிசிசிஐ அதே மனுவில் கேட்டுள்ளது.
 
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 11ஆம் தேதி விசாரணைக்கு வருவதால் அதற்குத் தயார் படுத்திக் கொள்ளவே அந்த எழுத்துப்படியை கேட்டுள்ளதாக பிசிசிஐ வழக்கறிஞர் சி.எஸ். சுந்தரம் தெரிவித்தார்.


முன்னதாக உச்சநீதிமன்றம் கடந்த விசாரணையின் போது சுனில் கவாஸ்கரை ஐபிஎல் தொடர்பான விவகாரங்களுக்கு தலைவராக பொறுப்பேற்க அறிவுறுத்தியது நினைவிருக்கலாம். 

 
 

Share this Story:

Follow Webdunia tamil