Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் கைவிடப்பட்டது இறுதிப் போட்டி; தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2015 (22:05 IST)
இந்­தியா – தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
 

 
இந்­தியா – தென்­னா­ப்பி­ரிக்க அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி கொல்­கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்­க இருந்தது.
 
3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
 
இதனால், 3ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
 
ஆனால், தொடர்ச்சியாக பெய்த மழையால் ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
 
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை தட்டிச் சென்றது. தொடர் நாயகன் விருது தென் ஆப்பிரிக்க வீரர் ஜேபி டுமினிக்கு வழங்கப்பட்டது.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments