Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.சி.சி.ஐ தலைவராகிறார் ஷஷாங்க் மனோகர்

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (07:28 IST)
ஜக்மோகன் டால்மியாவின் மறைவைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்புக் குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி மாரடைப்பால் கொல்கத்தாவில் உள்ள பிர்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


 

 
 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் ஜக்மோகன் டால்மியா  கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தார்.ஜக்மோகனின் மறைவைத் தொடர்ந்து புதிய தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்புக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 
 
இந்தக் கூட்டத்தில் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவராக இருந்த  ஷஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் என்.ஸ்ரீநிவாசனின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

Show comments