Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் டிராவிட்டை முந்துவாரா கேப்டன் தோனி?

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2014 (14:30 IST)
இன்னும் 6 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங்  தோனி உள்நாட்டுப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் 2 ஆவது இடத்தைப் பிடிப்பார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் தொடர், இன்று தர்மசேலாவில் நடைபெற இருக்கிறது. இன்றையப் போட்டிகளில் தோனி மேற்கொண்டு 6 ரன்கள் எடுக்கும் நிலையில் உள்நாட்டில் அதிகமாக ரன் குவித்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளிவிடுவார்.
 
ஒட்டுமொத்தமாக சச்சின் டெண்டுல்கர்  6976 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். ராகுல் திராவிட் 3406 ரன்கள் குவித்து 2 ஆவது இடத்தில் உள்ளார்.
 
இன்று நடைபெறும் போட்டி தோனிக்கு 250 ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதிகப் போட்டிகளில் விளையாடியுள்ள விக்கெட் கீப்பர்களின் பட்டியலிலும் டோனி 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சங்ககரா (336), மார்க் பவுச்சர் (294), ஆடம் கில்கிறிஸ்ட் (282) ஆகியோருக்கு அடுத்தப்படியாக தோனி உள்ளார்.
 
இன்றைய போட்டியில் அரைச்சதம் அடிக்கும் பட்சத்தில், உள்நாட்டுப் போட்டிகளில் 20 அல்லது 20 க்கும் மேற்பட்ட அரைச்சதங்கள் அடித்த கேப்டன்களின் வரிசையில் தோனி 3 ஆவது இடத்தைப் பிடிப்பார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (25), தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் (23) ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். தோனி இதுவரை 19 அரைச்சதங்கள் அடித்துள்ளார்.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

Show comments